உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்ததில் 6 ஆடுகள் பலி - அச்சத்தில் மக்கள்!

உடுமலை அடுத்த படையாட்சி புதூரில் தங்கராசு என்பவரது தோட்டத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு தாக்கியதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வனத்துறை குழு அமைத்து கண்காணித்து மர்ம விலங்கை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே 6 ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கை வனத்துறை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி அடுத்த படையாட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் தங்கராசு. இவரது தோட்டத்துக்கு அருகேயுள்ள சாலை பகுதியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நள்ளிரவில் வந்த மர்ம விலங்கு கடித்து குதிறியதாக கூறப்படுகிறது. இதில், ஆறு ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

மேலும் இரண்டு ஆடுகள் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே மர்ம விலங்கு நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், வனத்துறையினர் இப்பகுதியில் குழு அமைத்து இரவு நேரங்களில் கண்காணித்து ஆடுகளை கொன்று வரும் மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...