கோவை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாட்டம்!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.


கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தினம் குறித்து பேசினர்.



தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.



அதேபோல துடியலூர் - அப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் தொழிற்சங்க பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு துடியலூர் பகுதி கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அம்மாபேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், 1வது வட்ட கழக அவை தலைவர் செல்வகுமார், 2, 2ஏ, 14, 15ஏ வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி, பந்தல் வீடு பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...