கோவை வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாட்டம்!

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தனர்.


கோவை: துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ, ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து மே தினம் குறித்து பேசினர்.



தொடர்ந்து துடியலூர் பகுதி கழக செயலாளர் வனிதாமணி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.



அதேபோல துடியலூர் - அப்பநாயக்கன்பாளையம் செல்லும் சாலையில் தொழிற்சங்க பேரவை கொடி ஏற்றப்பட்டது. இந்த விழாவிற்கு துடியலூர் பகுதி கழக அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க கிளை தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தார்.



இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், அம்மாபேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், 1வது வட்ட கழக அவை தலைவர் செல்வகுமார், 2, 2ஏ, 14, 15ஏ வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி, பந்தல் வீடு பிரகாஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...