மே தினம் - கோவையில் தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் மே தினத்தை முன்னிட்டு பேரணியாக சென்றனர்.



கோவை: கோவையில் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

உலகம் முழுவதும் மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினமாக கொண்டாடுகின்றனர். தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகிகளின் நினைவுகளை போற்றும் விதமாக இன்றைய தினம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவையில் சிந்தாமணி முதல் காமராஜ்புரம் வரை இடதுசாரி அமைப்பைச் சார்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள் பேரணி நடத்தினர்.



இதில் எட்டு மணி நேர வேலைக்காக போராடிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக போராடிய தியாகங்கள் உள்ளிட்டவற்றை போற்றி முழங்கினர்.



தொழிலாளர்களின் உரிமை ஒருபோதும் பறிபோகக் கூடாது என்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் விரோத போக்கை கடைபிடிக்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டனர்.



தொழிலாளர்களின் நலம் சார்ந்து பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.



இந்தப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்று பேரணியில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...