பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் வசந்தகால மலர் வழிபாடு - பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை ஏற்பாடு!

கோவையில் பிரசித்திபெற்ற பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில் வசந்தகால மலர் வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர்.



கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பட்டிநாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பாக மலர் வழிபாடு நடைபெறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக நடைபெறமால் இருந்த மலர் வழிபாடு இந்த ஆண்டு வெகு சிறப்பாக தொடங்கியது.



கோடை காலம் முடிந்து வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக அர்த்த கால பூஜையாக இந்த பூஜை நடைபெற்றது. இதில், சுமார் 400 கிலோ அளவிலான அரிய வகை மலர்களை கொண்டு சிறப்பு மலர் வழிபாடு செய்யப்பட்டது.



தாமரை, அரளி, செண்பகம், பாரிஜாதம், வாடாமல்லி, வெச்சி, மருகு, மரிக்கொழுந்து, என 48 வகை மலர்களை கொண்டு மூலவரான சிவனுக்கு மலர் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.



பட்டிநாயகர் சைவநெறி அறக்கட்டளை தலைவர், முனைவர் இலட்சுமிபதிராசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...