பானிபூரியில் உப்பில்லை எனக் கூறி மதுபோதையில் தகராறு - பல்லடத்தில் பேக்கரி மீது பெட்ரோல் குண்டுவீச முயற்சித்த 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு என்ற இடத்தில் பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி உரிமையாளரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர், பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் பெருந்தொழுவு என்ற இடத்தில் பத்து வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று திருப்பூரை சேர்ந்த அஸ்வின்,பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர்.

நான்கு பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளர் சதீஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பானிபூரி தட்டை தூக்கி வீசிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த நால்வரும், காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர். பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் அங்கிருந்து நால்வரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.



இது தொடர்பாக சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன. பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகளால் பெருந்தொழுவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...