கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு!

கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் குறித்து ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மழைநீர்‌ வடிகாலில்‌ உள்ள செடி கொடிகளை போர்கால அடிப்படையில்‌ உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண் 18க்கு உட்பட்ட நல்லாம்பாளையம்‌ பகுதியில்‌ உள்ள மழைநீர்‌ வடிகாலை மேயர் கல்பனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்கால அடிப்படையில்‌ தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

மேலும்‌, அப்பகுதியில்‌ உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌, பொது கழிப்பறை கட்டிடத்திற்கு, உரிய இடத்தினை தேர்வு செய்து, திட்ட மதிப்பீடு தயார்‌ செய்திடவும்‌ சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்‌.



இதனை தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌ பகுதியில்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.30க்கு உட்பட்ட கணபதி பகுதியில்‌ உள்ள மழைநீர் வடிகாலினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகாலில்‌ உள்ள செடி, கொடிகளை உடனடியாக அகற்றி தூர்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ உத்தரவிட்டார்‌.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...