கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அரசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுவர்தன் என்பவரின் இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



கோவை: கோவை அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவர்தன், திருட்டு தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பைக் கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடிவருகின்றனர்.

இந்த பைக் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...