கோவையில் 1,234 சைபர் கிரைம் புகார்கள் பதிவு - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்

கோவை மாவட்டத்தில் நடபாண்டில் மட்டும் சைபர் கிரைம் பிரிவில் 1,234 புகார்கள் வந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார். காவல்நிலையங்களில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில், சைபர் கிரைம் தொடர்பாக, 1,234 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சைபர் கிரைமில் மோசடி, ஏமாற்றுதல் என புகார்கள் அதிகமாகி வரு கிறது. நடப்பாண்டில் சைபர் கிரைமில், 1,234 புகார்கள் பெறப்பட்டு விசாரிக்கப்படுகிறது. அதில், 5 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது 4.61 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்படும் புகார் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தர குவிந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் சுமார், 1700 புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது. எஸ்.பி., அலுவலகத்தில்அளிக்கப்படும் புகார் மனுக்கள், 5 நாட்களில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் புகார்களுக்கு, விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவில் ரவுடிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 343 ரவுடிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 285 ரவுடிகள் எந்த குற்றமும் செய்யமாட்டோம்" என பிணை பத்திரம் எழுதி தந்துள்ளனர். 48 ரவுடிகள் சிறையில் உள்ளனர். ஜாமீனில் வந்துள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.

கஞ்சா, போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதில், கோவை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விசாகப்பட்டணம், பெங்களூரு ஆகிய இரு இடங்களில் இருந்து, அதிகளவு கஞ்சா கடத்தி வருகின்றனர்.

மாவட்ட அளவில், 145 கல்லுாரிகளில் வருகிற, 8ம் தேதி முதல், போதை பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள, 11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி முறையாக நடக்கிறது. இ - பீட் மூலமாக ரோந்து பணிகள் முறைப்படுத்தப்பட்டு, விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...