கோவை மதுக்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தடை செய்யப்பட்டு லாட்டரிகளை விற்பனை செய்து வந்த மதுக்கரை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுக்கரை காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மதுக்கரையை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதுக்கரை காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மதுக்கரையை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.