கோவை மதுக்கரை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை - ஒருவர் கைது!

கோவை மதுக்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தடை செய்யப்பட்டு லாட்டரிகளை விற்பனை செய்து வந்த மதுக்கரை பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட காவல்துறையினர் சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மதுக்கரை காவல் நிலைய பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மதுக்கரையை சேர்ந்த விஸ்வநாதன் (63) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடமிருந்து 480 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...