விலங்குவதைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு - கோவை காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்பு

கோவை மாவட்ட காவல்துறையினருக்கு விலங்குகள் மீதான குற்றத்தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம்பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், காவல்துறையைச் சேர்ந்த 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் விலங்குகளுக்கு எதிரான குற்றங்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியான நடைவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள கோவை மாவட்ட காவல் துறையினருக்கு



DOGS OF COIMBATORE என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவனர் கேசிகா ஜெயபாலன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீனாட்சி, மதுமிதா மற்றும் விலங்கு நல ஆர்வலர் ஆண்டனி ரூபின்குழு உதவியுடன் விலங்குகள் மீதான குற்றம் தடுப்பு மற்றும் விலங்குகள் வதை சட்டம் பற்றி விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், 35 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தொடங்கிவைத்து, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி அவர்களை விலங்கு நல தொடர்பு அதிகாரிகளாகவும் நியமித்தார்.

மேலும், Society for Prevention of Cruelty to Animals என்ற தன்னார்வ நிறுவனத்தின் உதவியுடன் கோவை மாவட்ட காவலர்களுக்கு, மிருகங்கள் சித்திரவதை தொடர்பாக வரும் புகார்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி விளக்கி, 14 சட்ட விதிகள் அடங்கிய போஸ்டர்களை காவல் நிலையத்தில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டி வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் சிபிஎஸ்பிசிஏ, டாக்டர் கே. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...