கோவையில் உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது!

கோவை நவக்கரை அருகே உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு செல்லும் பாலக்காடு சாலை நவக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்வதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், தனிப்படை போலீசார் சாதாரண உடையில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தனியார் கல்லூரி மாணவர்கள் இருவர், உயர் ரக போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் மேற்கொண்டனர்.

விசாரணையில், பிடிபட்ட மாணவர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமத் பைசல் (வயது18), கோவை தனியார் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவர் மற்றும் அபினந்த் (வயது21) இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இருவரும் பெங்களூரில் இருந்து mathamphetamine என்ற உயர் ரக போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 6 கிராம் போதை பொருள் பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...