கோவை குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்து கல்லூரி மாணவனுக்கு கால் முறிவு!

கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையிலிருந்த தீயணைப்பான் வெடித்ததில் சாலையில் சென்ற அருண்குமார் என்ற கல்லூரி மாணவனின் கால் முறிந்தது. விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: குனியமுத்தூரில் தீயணைப்பான் வெடித்ததில் கல்லூரி மாணவன் கால் முறிந்தது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர் கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அருண்குமார் தனது பைக்கில் நண்பர் ஹரிபிரசாத் என்பவருடன் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, குனியமுத்தூர் நரசிம்மபுரம் அருகே வந்தபோது அப்பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையிலிருந்து, பயங்கர சத்தத்துடன் தீயணைப்பான் வெடித்து சிதறி சாலையில் பைக்கில் சென்ற அருண்குமார் காலில் அடித்துள்ளது.



இதில் இடது காலில் அருண்குமாருக்கு முறிவு ஏற்பட்டது. மேலும் தவறி விழுந்ததில் ஹரிபிரசாத்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. விசாரணையில் குமார் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு கடைக்கு வந்த நபர் ஒருவர் 3 பழைய தீயணைப்பானை கொடுத்ததாகவும், அதனை சோதனை செய்தபோது ஒரு தீயணைப்பான் வெடித்து சிதறி அருண்குமார் மீது பட்டதும் தெரியவந்தது.



விபத்து தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...