சிகரெட் பாக்கெட்டுகள் போல மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் வேண்டும் - பாமக கோரிக்கை மனு!

சிகரெட் பாக்கேட்டுகளில் உள்ளது போல மது பாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மது பாட்டில்களுடன் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


கோவை: மதுபாட்டில்களிலும் எச்சரிக்கை புகைப்படம் ஒட்ட வேண்டும் என கோரி பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.



இந்நிலையில் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு மதுக்கடைகளை அதிகரித்துடன் தானியங்கி மதுவிற்பனை இயந்திரம், திருமண மண்டபங்களில் மதுபானங்கள் அருந்த அனுமதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் மக்களுக்கு மது என்னும் விஷத்தை அருந்த ஊக்கப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.



இந்த நிலையில் கோவை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அனு அளிக்கப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தலைமையில், ஏராளமான பாமகவினர் மது பாட்டில்களுடன் வந்து மனுவை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது புகையிலை மற்றும் சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை புகைப்படம் இடம் பெற வேண்டுமென்று உத்தரவிட்டார். இதன் காரணமாக புகையிலை மற்றும் சிகரெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதேபோல் தற்போது தமிழகத்தில் மதுகுடிப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எச்சரிக்கை புகைப்படத்தை அனைத்து மதுபாட்டில்களிலும் இடம் பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...