திருப்பூரில் குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பட்டுக்கோட்டையார் நகரின் 8 வீதிகளிலும் உள்ள குடிநீர் குழாய் பழுதாகியுள்ளன. புதிய குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சாலைகளை புதிதாக செப்பனிட வேண்டும். வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து குடிநீர் பற்றாக்குறை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் படிப்படியாக சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பட்டுக்கோட்டையார் நகரின் 8 வீதிகளிலும் உள்ள குடிநீர் குழாய் பழுதாகியுள்ளன. புதிய குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சாலைகளை புதிதாக செப்பனிட வேண்டும். வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து குடிநீர் பற்றாக்குறை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் படிப்படியாக சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.