திருப்பூர் மதுபானக் கூடத்தில் இளைஞரைத் தாக்கிய ஊழியர்கள் - வைரல் வீடியோவால் பரபரப்பு!

திருப்பூரில் மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவரை கடை ஊழியர்கள் கம்பால் சரமாரியாக தாக்கி இழுத்துச் சென்றனர். இதை மதுஅருந்த வந்த ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.



திருப்பூர்: திருப்பூர் புஷ்பா ரவுண்டான கல்லூரி சாலை சந்திப்பில் உள்ள மதுபான கடை ஒன்றில் மது அருந்திய இளைஞர் ஒருவரை மதுபான கூட ஊழியர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அந்த வீடியோவில், முதலில் கைகளால் தாக்கிய மதுபானக்கூட ஊழியர்கள் பிறகு கையில் ஒரு லத்தியை கொண்டு தாக்குவதும், கழுத்தை நெரிப்பதும் பின்னர் தரதரவென இழுத்துச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.



இந்த வீடியோ அங்கு மது அருந்த சென்ற ஒருவரின் மொபைல் மூலம் எடுக்கப்பட்டுள்ளது . தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யப்படாத நிலையில், சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...