கோவையில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் - ஒருமணிநேரமாகியும் உதவ யாரும் வராததால் பலி!

கோவை வடவள்ளி அருகே தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த சந்திரன்(50) என்ற தொழிலாளியை காப்பாற்ற யாரும் வராததால் ஒரு மணி நேரம் போராடி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வடவள்ளி அருகே பெயிண்ட் அடித்த போது சாரத்திலிருந்து தவறி விழுது தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லோட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்று வருகிறது.

முரளி என்ற பெயிண்டருடன் அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50) மற்றும் சாய்பாபா காலனியை சேர்ந்த ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்க துவங்கி உள்ளனர்.



சாரத்தில் சந்திரன் தொங்கிய படி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் கீழ் விழுந்துள்ளார். நான்காவது மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து அவர் மதில் சுவரில் தலையின் பின் பகுதி மோதியத்தில் உயிருக்கு போராடி உள்ளார். உடன் வேலை செய்தவர்கள் என அருகில் செல்ல பயத்தில் நடுங்கபடியே நின்று உள்ளனர்.



ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரன் ஒரு மணி நேரம் ஆகியும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை. யாரும் அருகில் உள்ள‌ மருத்துவ மனைக்கு அழைத்தும் செல்ல வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்துள்ளனர்.



அங்கு வந்து மருத்துவர்கள் அவரை பிசோதனை செய்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர்.

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயிருக்கு போராடிய நபருக்கு உதவ யாரும் வராததால், தொழிலாளி உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...