கோவையில் வாகன ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கோவை போத்தனூரில் வாகன என்ஜின் ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் கடை உரிமையாளர் மீது போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாகன ஆயில் விற்பனை கடையை அணித் நிர்மல் ராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பிலான ஷெல் ஆயில்களை வாங்கியுள்ளார்.

இதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் அணித் நிர்மல்ராஜ் தாமதம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தினர் கேட்டதால் நான்கு காசோலைகளை நிர்மல் ராஜ் வழங்கி உள்ளார்.

அதில் முதல் காசோலைக்கு ரூ.2 லட்சம் எடுக்கப்பட்ட நிலையில், மற்ற காசோலைகளுக்கு நிர்மல் ராஜ் வங்கியில் பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அப்போது, அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த அணித் நிர்மல் ராஜ் மீது தனியார் நிறுவனத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...