கோவையில் வாகன ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை!

கோவை போத்தனூரில் வாகன என்ஜின் ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் கடை உரிமையாளர் மீது போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வாகன ஆயில் விற்பனை கடையை அணித் நிர்மல் ராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பிலான ஷெல் ஆயில்களை வாங்கியுள்ளார்.

இதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் அணித் நிர்மல்ராஜ் தாமதம் செய்து வந்துள்ளார். தொடர்ந்து அந்த தனியார் நிறுவனத்தினர் கேட்டதால் நான்கு காசோலைகளை நிர்மல் ராஜ் வழங்கி உள்ளார்.

அதில் முதல் காசோலைக்கு ரூ.2 லட்சம் எடுக்கப்பட்ட நிலையில், மற்ற காசோலைகளுக்கு நிர்மல் ராஜ் வங்கியில் பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.

அப்போது, அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆயில் வாங்கி ரூ.4.80 லட்சம் மோசடி செய்த அணித் நிர்மல் ராஜ் மீது தனியார் நிறுவனத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...