நான்கு சக்கர வாகனம் வாங்கியதில் மோசடி - போத்தனூர் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்!

கோவை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிவிட்டு, அதற்கான ரூ.6 லட்சம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தேனியைச் சேர்ந்த சுரேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து.

இவரது மகன் ரமேஷ்குமார் (42). இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது நான்கு சக்கர வாகனத்தை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (வயது45) என்பவருக்கு விற்பனை செய்ய ரமேஷ்குமார் பேசியுள்ளார்.

இதையடுத்து ,கோவை வந்த சுரேஷ், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை ஏழு நாட்களுக்குள் கொடுப்பதாக கூறிவிட்டு நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தராமல் இருந்ததோடு, சுரேஷ் செல்போனில் அழைத்தபோதும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ், போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...