வால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளுக்கு தீர்வு!

வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.7,49,000 வசூலிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழ்நாடு அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதன்படி வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற நடுவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.



வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆா்.ஆா். பெருமாள், சட்ட பணிகள் குழு உறுப்பினா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் 83 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், லாட்டரி சீட்டு விற்பனை, சீட்டு விளையாட்டு போன்றவை மூலம் ரூ. 1,09,000 அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும் இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 11 தோட்ட நிறுவன வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. செக் மோசடி வழக்குகள் ரூ.6,40,000 முடிக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பால்பாண்டி, முருகன், முத்துசாமி, சுமதி ஆகியோர்களும், சட்ட தன்னார்வ பணியாளா்கள், மூர்த்தி, வால்பாறை முனியாண்டி, காஞ்சமலை முனியாண்டி, தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளா் முத்துப்பாண்டி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...