வால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளுக்கு தீர்வு!

வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.7,49,000 வசூலிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழ்நாடு அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதன்படி வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற நடுவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.



வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆா்.ஆா். பெருமாள், சட்ட பணிகள் குழு உறுப்பினா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் 83 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், லாட்டரி சீட்டு விற்பனை, சீட்டு விளையாட்டு போன்றவை மூலம் ரூ. 1,09,000 அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும் இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 11 தோட்ட நிறுவன வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. செக் மோசடி வழக்குகள் ரூ.6,40,000 முடிக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பால்பாண்டி, முருகன், முத்துசாமி, சுமதி ஆகியோர்களும், சட்ட தன்னார்வ பணியாளா்கள், மூர்த்தி, வால்பாறை முனியாண்டி, காஞ்சமலை முனியாண்டி, தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளா் முத்துப்பாண்டி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...