தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை - முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தகவல்!

கோவையில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல், தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது. இந்த கோவில்களில் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


கோவை: தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிப்பதாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சைவப்பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,



உலகில் பல நாடுகளிலும் சிவனடியார்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலுள்ள சிவனடியார்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான நோக்கம் ஒன்று தான். நம் முன்னோர்கள் தேடி வகுத்துக் கொடுத்து கோவில்களை இறைவனின் திருமேனிகளையும் பாதுகாப்பது தான். தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது.

அனைத்து கோவில்களிலும் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உலக சிவனடியார் திருக்கூட்டத்தில் இணைய வேண்டும். தெய்வ தொண்டு ஆற்ற வேண்டும்.

அப்போது இந்து சமயம் தழைத்தோங்கும், கோவில்களும், திருமேனிகளும் பாதுகாக்கப்படும். அடுத்து வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். கோவில் சிலை திருட்டு வழக்குகள் பதிவு செய்வதில் காவல்துறையினர் அக்கரை காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...