சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - திருப்பூர் மாணவி இரண்டாம் இடம் பிடித்து சாதனை

திருப்பூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி ஸ்ரீசா சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


திருப்பூர்: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வீதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியைச் சேர்ந்த மாணவி ஸ்ரீசா500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவியை பாராட்டும் வகையில், பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவிக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



பள்ளி நிர்வாகம் சார்பில் வெற்றி பெற்ற மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இதேபோல் மாவட்ட அளவில் மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஸ்ரீசா, பள்ளி நிர்வாகம் அளித்த முழு ஒத்துழைப்பின் காரணமாக தான் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடிக்க முடிந்ததாகவும், பள்ளி ஆசிரியர்கள் தனக்கு உதவிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...