நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு!

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலந்ததால் நுரைத் ததும்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியரும் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் அனைத்தும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றின் நீரை சுத்தப்படுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...