நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு!

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலந்ததால் நுரைத் ததும்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியரும் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் அனைத்தும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றின் நீரை சுத்தப்படுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...