கோவையில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு!

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.


கோவை: ஆர்.எஸ்.புரத்தில் கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று முதல் 26 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், நடைபெறும் இந்த முகாமை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.



2023-24 கல்வியாண்டில் 8ம் வகுப்பு 9ம் வகுப்பு பயிலும் அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.



இந்த பயிற்சி முகாமில் பானை ஓவியம், மணல் சிற்பம், காகித வேலைப்பாடுகள், களிமண் சிற்பம், மெழுகு சிற்பம் போன்ற பல்வேறு வகையான கலைகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.



இந்த தொடக்க நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, கல்வி குழு தலைவர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...