கோவையில் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் - 139 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது!

கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 141 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், நடத்தப்பட்ட விசாரணையில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.


கோவை: கோவையில் காவல்துறை சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 139 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு காணப்பட்டது.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்றைய தினம் மாவட்ட போலீசார் சார்பில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மக்கள் மீண்டும் மறுவிசாரணை கோரி மனு அளித்தனர்.



கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 141 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.



இந்த மறு விசாரணையில் 2 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.



இதில், 139 மனுக்களுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டது.

மேலும் போலீசார் எடுக்கும் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்றால் அந்தந்த கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...