உக்கடம் கழிவு நீர் தொட்டியில் சட்டவிரோதமாக தொழிற்சாலை கழிவுநீர் கலப்பு - ரூ.50,000 அபராதம் விதிப்பு!

உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியில் சட்ட விரோதமாக தொழிற்சாலையின் நச்சுக் கழிவு நீரை கொண்டு வந்து இறக்கிய கழிவுநீர் வாகன உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை உக்கடம் கழிவுநீர் தொட்டியில் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுநீரை கலந்த நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கோவை‌ தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.86-ல்‌ உக்கடம்‌ சாக்கடை இணைப்பு இல்லாத (UGD) பகுதிகளில்‌ உள்ள வீடுகளில்‌ சேகரிக்கப்படும்‌ கழிவுநீரை வாகனத்தின்‌ மூலம்‌ சேகரித்து மாநகராட்சி கழிவு நீர் ஊற்றும்‌ இடத்தில்‌ இறக்கப்பட்டு, பின்‌ உக்கடம்‌ STP சென்று சுத்திகரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ அனுமதிக்கு முரணாக தொழிற்சாலைகளில்‌ வெளியேறும்‌ நச்சு கழிவு நீரை இன்று (17.05.2023) மதியம்‌ 12.00 மணிக்கு TN 48 AZ 4780 என்ற வாகனத்தில்‌ எடுத்து வந்து உக்கடம்‌ கழிவுநீர்‌ தொட்டியில்‌ இறக்கும்‌ பொழுது துர்நாற்றம்‌ மற்றும்‌ பச்சை நிறமாக நுரையுடன்‌ வெளியேறியது.

இதுகுறித்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்‌ விசாரணை செய்ததில்‌ முன்னுக்கு பின்‌ முரணாக பேசி பணி செய்ய விடாமல்‌ தடுத்த வாகன உரிமையாளா்‌ பழனிசாமி என்பவருக்கு ரூ.50,000 அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, காவல்துறையின்‌ மூலம்‌ வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனிவரும்‌ காலங்களில்‌ தொழிற்சாலை மற்றும்‌ பிற வணிக நிறுவனங்களிடமிருந்து வெளியேறும்‌ நச்சுக் கழிவுநீரை உக்கடம்‌ பகுதிக்கு கொண்டு வந்து இறக்கினால்‌ அவர்கள்‌ மீது, அபராதம்‌ விதிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌

இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...