கோவையில் மாயமான சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்பு

கோவை ஒண்டிபுதூரில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுமி ஶ்ரீநிதி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இரவு மீட்கப்பட்டு, கோவைக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டில் பெற்றோர் திட்டியதால் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் மாயமான 12 வயது சிறுமி, பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்டார்.

கோவை ஒண்டிப்புதூர் திப்பே கவுண்டன் வீதியை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி சசிகலா (38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சசிகலா பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் ஸ்ரீநிதி (12) தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஸ்ரீநிதி வீட்டின் அருகே தனது தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்து மாயமாகி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகரன் மகள் மாயமானது குறித்து சசிகலாவிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த சசிகலா சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் தேடியும் ஸ்ரீநிதி கிடைக்காத நிலையில், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான சிறுமியை இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தேடி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சிறுமியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை சமூக வலைதளங்களில் மூலம் அனுப்பி சிறுமி பார்த்தால் தகவல் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் சிறுமி பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்கள் திட்டியதால் சிறுமி வெளியேறியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...