கோவையில் குழந்தையின் படுக்கையில் புகுந்த நல்ல பாம்பு - பெற்றோர் அச்சம்!

கோவை போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துவிட்டு அதனை இழுத்த போது, அதற்கு அடியில் பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு வந்த பாம்பு பிடிவீரர் மோகன், நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதியில் விட்டுள்ளார்.


கோவை: போத்தனூர் அருகே குழந்தைக்கான படுக்கையில் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போத்தனூர் அருகே தாய் ஒருவர் குழந்தைக்கான படுக்கையில் (Baby Bed) தனது குழந்தையை படுக்க வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த படுக்கையை இடம் மாற்றுவதற்காக அதனை இழுத்துள்ளார்.

அப்போது, அந்த படுக்கைக்கு அடியில் நல்ல பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட தாய் குழந்தையை உடனடியாக தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியில் கொண்டு வந்துள்ளார்.

தொடர்ந்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த பாம்பு பிடி வீரர் மோகனுக்கு குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன், குழந்தையின் படுக்கைக்கு அடியில் இருந்த நல்ல பாம்பை லாவமாக பிடித்து பிளாஸ்டிக் குடுவைக்குள் அடைத்தார். பின்னர் அந்த நல்ல பாம்பை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தார்.

குழந்தையின் படுக்கையில் இருந்த பாம்பு அதிர்ஷ்டவசமாக குழந்தையை எதுவும் செய்யாமல் இருந்ததாக பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...