கோவையில் தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகையை பறிக்க முயற்சி - இளைஞர் கைது!

வெள்ளலூர் அருகே என்.ஜி ஆர் சாலையில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஜெயகௌரி (44) என்பவரது கழுத்தில் இருந்த நகையை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பேராசிரியர் ஜெயகௌரியே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வெள்ளலூர் அருகே கல்லூரி பேராசிரியரிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் என்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்பவரது மனைவி ஜெயகௌரி (44). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பணி முடிந்து வந்த ஜெயகௌரி என்.ஜி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஜெயகௌரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட ஜெயகௌரி அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்களும் கூடி இளைஞரை பிடித்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது.

மேலும், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்த இவர், பணத்திற்காக பேராசிரியை ஜெயகௌரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...