கோவையில் தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகையை பறிக்க முயற்சி - இளைஞர் கைது!

வெள்ளலூர் அருகே என்.ஜி ஆர் சாலையில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஜெயகௌரி (44) என்பவரது கழுத்தில் இருந்த நகையை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பேராசிரியர் ஜெயகௌரியே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வெள்ளலூர் அருகே கல்லூரி பேராசிரியரிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் என்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்பவரது மனைவி ஜெயகௌரி (44). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பணி முடிந்து வந்த ஜெயகௌரி என்.ஜி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஜெயகௌரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட ஜெயகௌரி அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்களும் கூடி இளைஞரை பிடித்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது.

மேலும், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்த இவர், பணத்திற்காக பேராசிரியை ஜெயகௌரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...