மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2.39 கோடி முடக்கம் - கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்கி, ரூ.23.82 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார். மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.39 கோடியை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.39 கோடியை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்த போது இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால் அதற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். 

அதனை நம்பி சிறிய அளவில் முதலீடு செய்த அவருக்கு பணமும் வந்தது. இதையடுத்து நாங்கள் சொல்வது போல் நிறைய பணம் முதலீடு செய்தால் இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய ராஜா ரூ.23.82 லட்சத்தை டெலிகிராம் செயலின் மூலம் முதலீடு செய்தார். 

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை, இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 

அந்த வங்கி கணக்குகளில் பலரிடமிருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.2.39 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொதுமக்கள் மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...