மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.2.39 கோடி முடக்கம் - கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அதிரடி!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஆன்லைன் மோசடி கும்பலின் வலையில் சிக்கி, ரூ.23.82 லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த சைபர் கிரைம் போலீசார். மோசடி நபர்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.2.39 கோடியை முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலின் வங்கி கணக்கில் உள்ள ரூ.2.39 கோடியை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடி வந்தார். அவருக்கு சமூக வலைதளமான டெலிகிராம் செயலியில் இருந்து ஒரு லிங்க் வந்தது. அதை கிளிக் செய்த போது இணையத்தில் சிறிய வேலைகளை செய்தால் அதற்கு நிறைய பணம் கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர். 

அதனை நம்பி சிறிய அளவில் முதலீடு செய்த அவருக்கு பணமும் வந்தது. இதையடுத்து நாங்கள் சொல்வது போல் நிறைய பணம் முதலீடு செய்தால் இன்னும் பல மடங்கு லாபம் கொட்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய ராஜா ரூ.23.82 லட்சத்தை டெலிகிராம் செயலின் மூலம் முதலீடு செய்தார். 

ஆனால் அதன் பிறகு அவருக்கு எந்த பணமும் வரவில்லை, இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், எஸ்.பி.பத்ரிநாராயணன் உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய போலீசார் மோசடி பேர்வழிகளின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தனர். 

அந்த வங்கி கணக்குகளில் பலரிடமிருந்து மோசடியாக பெறப்பட்ட ரூ.2.39 கோடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தொகையை அப்படியே முடக்கி வைக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட ராஜாவுக்கு உரிய பணத்தை பெற்று தர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், பொதுமக்கள் மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற கூடாது என போலீசார் எச்சரிக்கின்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...