ஐடி ரெய்டு முடிந்து அறிக்கை வெளியிடும் போது அனைவரும் கதறுவார்கள்..! - கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் சூசகம்!

திமுக அரசை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என சூசகமாக தெரிவித்தார்.



கோவை: வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் தெரிவிவித்துள்ளார்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், கள்ள சாராயம், போதைப் பொருட்கள் புழக்கம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் இந்த ஆட்சியில் நடைபெறுவதாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அம்மன் அர்ச்சுனன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் மேயர் வேலுச்சாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்சுணன்,



இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது? அதுவரை வந்த வருமானம் எத்தனை என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகளையே அடிக்க செல்லும் தைரியம் அவர்களுக்கு (திமுக) தான் உள்ளது. 

நாங்கள் ஏதாவது செய்தால் தமிழக அரசு எங்களை கைது செய்யும் போது, டெல்லி அரசாங்கம் இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துதல் என்ற சட்டம் தற்போது எங்கே சென்றது?. வருமானவரித் துறை சோதனைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கூறுகையில் எதற்காக அவரது தம்பியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் பொழுது அதிகாரிகளை தாக்கினார்கள்?. 

இன்னும் 10 நாட்களில் சோதனை விவரங்கள் எல்லாம் தெரியவரும், அப்போது அனைவரும் கதறுவார்கள். திமுகவின் தோழமை கட்சிகளுக்கு எல்லாம் மாதம் மாதம் கப்பம் வருவதால் அமைதியாக இருக்கிறார்கள். வைகோ எல்லாம் எங்கே சென்றார்?.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...