கஞ்சா வியாபாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு - கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை வெரைட்டிஹால் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதீஷ்குமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1.2 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி இளைஞர் ஒருவர் சி.எம்.சி காலனிக்கு செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கோவை பழைய மேம்பாலத்தில் இருந்து சி.எம்.சி. காலனிக்கு செல்லும் வழியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்துகொண்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர் வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த மஞ்சள் நிற துணிப்பையில் இருந்த ஒரு கிலோ 200 கிராம் அளவிலான கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை இன்றியமையா பொருட்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...