பல்லடம் அருகே குளிர்பான குடோனில் பணியாற்றிய 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் தப்பியோடி உள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் இயங்கி வரும் குளிர்பான குடோனில் பணியாற்றி வந்த வட மாநில குழந்தை தொழிலாளர்கள் 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே MVS நகரில் தனியார் குளிர்பான சேமிப்பு கிடங்கு இயங்கி வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இதில் பெரும்பாலானோர் பீகார், உத்திரபிரதேசம் போன்ற வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களில் ஏராளமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளதாக தொழிலாளர் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 



இதன் அடிப்படையில் இன்று குளிர்பான சேமிப்பு கிடங்கில் திருப்பூர் தொழிலாளர் துறை மூன்றாம் சரக உதவி ஆய்வாளர் சுகந்தி மற்றும் குழந்தைகள் நலக்குழு பணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 



இதில் குளிர்பான சேமிப்பு கிடங்கில் பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 14 முதல் 18 வயதுடைய 12 குழந்தை தொழிலாளர்கள் இரண்டு மாதங்களாக 12,000 ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றி வருவது விசாரணையில் கண்டறியப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்த நிலையில் ஆறு குழந்தை தொழிலாளர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.



இதை அடுத்து 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு திருப்பூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தியதற்காக குளிர்பான சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது குழந்தைகள் மற்றும் வளரினம் பருவ தொழிலாளர் முறைபடுத்துதல் மற்றும் தடுத்தல் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 12 பேரையும் அவர்களது பெற்றோர்களை வரவழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் தப்பி ஓடிய ஆறு குழந்தை தொழிலாளர்களையும் தேடி பிடித்து மீட்கப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குளிர்பான சேமிப்பு கிடங்கில் 12 வடமாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...