உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. 

முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...