கோவை காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய மாணவி!

கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களை கண்ட ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் கோவை சேர்ந்த மாணவி, இந்த நூலகங்களுக்காக 200 புத்தகங்களை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோடை விடுமுறைக்காக கோவை வந்துள்ள நிலையில், கோவை மாநகரக் காவல் துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களை பார்த்துள்ளார். 

இந்நிலையில் அந்த நூலகங்களுக்கு 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் தற்போது, தெருவோர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி ஏற்கனவே 12 வயதில் புத்தகங்களை வீடு வீடாக போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மாணவி புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...