தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி!

கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வட தமிழ்நாடு - ரூ.2,01,003 கோடி, மேற்கு தமிழ்நாடு - ரூ.99,037 கோடி, தென் தமிழ்நாடு - ரூ.23,471 கோடி, கிழக்கு தமிழ்நாடு - ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.



கோவை: கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் 2022 - மார்ச் 2023 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் ரூ. 3,26,711 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வட தமிழ்நாடுக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,01,003 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.99,037 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தென் தமிழ்நாடுக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.23,471 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...