கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது எனக்கூறி ஏமாற்ற முயன்ற கோவை பிரஸ் காலனியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்ற இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவையில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் தங்கி மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், கோவை பிரஸ் காலனியில் வசித்து வரும் ஸ்ரீராம் (24) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீராம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் குன்னூர் அழைத்துச் சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பின்னர் மீண்டும் கோவை வந்தவுடன் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என இளைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...