சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் கோவை சூலூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்போன் எண் மீண்டும் ஆன் செய்யப்பட்டதால், செல்போன் சிக்னலை வைத்து சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

உக்கடம் பகுதியில் இருந்து கடத்த 2 மாதங்களுக்கு முன் சூலூரில் குடியேறிய முத்துகாதர் மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தவறான தவலை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...