கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் செய்து காண்பித்தனர்.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்கள் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.
பி.ஆர்.எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மாநகர ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்துதல், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், யோகா, அணிவகுப்பு முறைகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
இதனை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் நேரில் பார்வையிட்டார்.