கோவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சிறுவன் வயிற்றில் வெடிகுண்டு கட்டிவைத்து உள்ளதாக மிரட்டல் விடுத்த போலி வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பீர்முகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை: கோவையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் வசிப்பவர் சுமதி. இவரது செல்போனை வாங்கிய ஒரு நபர், தன் மனைவிக்கு போன் பண்ண வேண்டும் என தெரிவித்திருக்கிறார். 

அப்பொழுது அந்த செல்போனை வாங்கி கோயம்புத்தூர் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த அந்த நபர், தான் சிறுவனின் வயிற்றில் வெடி குண்டை கட்டி வைத்திருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்திருக்கின்றார்.

உடனடியாக மாநகர போலீசார் அந்த செல்போனுக்கு அழைத்து விவரங்களை கேட்டிருக்கின்றனர். அந்த செல்போனின் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் சிறுவனின் வயிற்றில் வெடிகுண்டு கட்டி வைத்திருப்பதாக சொன்னது, பிரபல டுபாக்கூர் வெடிகுண்டு மிரட்டல் மன்னன் பச்சை மிளகாய் என்கிற பீர் முகமது என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்று அதிகாலை கைது செய்தனர். மதுபோதையில் சுமதி என்ற பெண்ணிடம் இருந்து, அலைபேசியை வாங்கி மனைவிக்கு போன் செய்வதாக தெரிவித்துவிட்டு, போலீசாருக்கு போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பி இருக்கும் பீர் முகமது, இவ்வாறு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றார். 

கடந்த காலங்களில் இதேபோன்று பலமுறை காவல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அந்த வெடிகுண்டானது விரைவில் வெடிக்கும் என்றும் மிரட்டல் விடும் நபர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...