சர்வதேச யோகா தினம் - ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு யோகா செய்து அசத்திய சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்!

சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ கோவையின் பல்வேறு இடங்களில்‌ சிறப்பு யோகா நிகழ்ச்சிகள்‌ இலவசமாக நடத்தப்பட்டன. இதில்‌ ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.



கோவை: சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். 

சர்வதேச யோகா தினமான இன்று (ஜூன்‌ 21) ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ கோவை விமான நிலையம்‌, ஆதியோகி, சூலூர்‌ விமான படை தளம்‌ உள்ளிட்ட பல்வேறு இடங்களில்‌ சிறப்பு யோகா நிகழ்ச்சிகள்‌ இலவசமாக நடத்தப்பட்டன. இதில்‌ ஆயிரக்கணக்கானோர்‌ பங்கேற்று பயன்பெற்றனர்‌.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில்‌ நடைபெற்ற நிகழ்ச்சியில்‌, விமான நிலையத்தின்‌ இயக்குநர்‌ செந்தில்‌ வளவன்‌ சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்‌. இதை தொடர்ந்து காலை 7 மணி முதல்‌ மாலை 6 மணி வரை பயணிகளுக்கென தனியாக யோகா வகுப்புகள்‌ நடைபெற்று வருகின்றன.

ஆதியோகி சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில்‌ நூற்றுக்கணக்கான சி.ஆர்‌.பி.எப்‌ வீரர்கள்‌ பங்கேற்று யோகா கற்றுக்கொண்டனர்‌. அதேபோல்‌, ஐ.என்‌.எஸ்‌ அக்ரானி, விமான படை கல்லூரி, வெள்ளலூரில்‌ உள்ள சிறப்பு அதிரடிப்‌ படை வளாகம்‌ போன்ற இடங்களில்‌ பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

இதுதவிர, கற்பகம்‌ கல்லூரி, இந்துஸ்தான்‌ கலை கல்லூரி, எஸ்‌.என்‌.எஸ்‌ பொறியியல்‌ கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில்‌ ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில்‌ சத்குருவால்‌ வடிவமைக்கப்பட்ட யோக நமஸ்காரம்‌, நாடி சுத்தி போன்ற பயிற்சிகள்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ முதுகு தண்டும்‌, நரம்பு மண்டலமும்‌ வலுபெறும்‌. மன அழுத்தம்‌ குறையும்‌, உடல்‌ மற்றும்‌ மன நலன்‌ மேம்படும்‌.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ஜூன்‌ 1-ம்‌ தேதி முதல்‌ கோவையில்‌ பல்வேறு இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

யோகா வகுப்பை நடத்த விரும்புபவர்கள்‌ Isha.co/idysessionrequest என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌. ஆன்லைன்‌ வாயிலாக இலவசமாக யோகா கற்றுக்கொள்ள isha.co/free-yogawebinars என்ற லிங்கில்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...