தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்ட அமைச்சர் காந்தி!

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வருகை தந்த அமைச்சர் காந்தி, குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் நூல்களின் தரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாவட்டம் குறிச்சியில் உள்ள தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டார். 

கோவையில் இன்று நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொள்கிறார். இதன் ஒரு நிகழ்வாக குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அங்குள்ள கருவிகளை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் துறையின் முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறையின் ஆணையர் வள்ளலார், மாநகராட்சி துணை ஆணையர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணி நூல் துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.

Newsletter

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...