தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது - ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்‌!

கோவை ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌, தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக தெரிவித்தார். மேலும் இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை எனவும் கூறினார்.



கோவை: தியானலிங்கம் மனதிற்கு அமைதியை தருவதாக திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானமான ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ தெரிவித்துள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்தின்‌ 24-வது குருமகா சன்னிதானம்‌ ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்‌ கோவை ஈஷா யோகா மையத்திற்கு கடந்த ஜூன்‌ 18 வருகை தந்தார்‌. 



அவருக்கு மடாதிபதிகளை வரவேற்கும்‌ சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர்‌ திரண்டு வரவேற்பு அளித்தனர்‌. 



பின்னர்‌, மகா சன்னிதானம்‌ பார்வையிடுவதற்காக ஆதியோகியில்‌ சிறப்பு திவ்ய தரிசனம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.



இதையடுத்து, நேற்று காலை (ஜூன்‌ 19) கைலாய வாத்தியம்‌ முழங்க ஆலயங்களுக்கு மகா சந்நிதானம்‌ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். அவர்‌ தியானலிங்கம்‌, லிங்கபைரவி, நாகா சந்நிதி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தார்‌. 

பின்னர்‌, நாட்டு மாடுகளை பராமரிக்கும்‌ ஈஷாவின்‌ கோசாலையை பார்வையிட்டார்‌. மேலும்‌, ஈஷா சம்ஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று மாணவர்களின்‌ களரி பயட்டை நேரில்‌ கண்டு களித்ததோடு மாணவர்களுடன்‌ கலந்துரையாடினார்‌.

மகா சந்நிதானம்‌ ஈஷாவிற்கு வருகை தந்தது குறித்த தனது அனுபவம் குறித்து பேசியதாவது, சத்குருவின்‌ ஈஷா அறக்கட்டளைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தரிசனம்‌ செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தியானலிங்கம்‌ மன அமைதியை தருகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ இங்கு வந்து யோகா கற்று பயனடைகிறார்கள்‌. இந்த யோக பயிற்சிகள்‌ அவர்களின்‌ உடல்‌ ஆரோக்கியம்‌ மேம்பட உதவும்‌. மன அமைதியையும்‌ அளிக்கும்‌. 

தேவார பாட சாலை மறறும்‌ கோசாலையை சென்று பார்வையிட்டோம்‌. கோசாலையை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள்‌. இது மிகப்பெரிய புண்ணியம்‌.

அதேபோல்‌, பாரம்பரியமான சிறு தானிய உணவுகளை கொண்டு இங்கு அன்னதானம்‌ அளிக்கிறார்கள்‌. இயற்கை விவசாயத்தை கற்றுக் கொடுப்பது, மரங்கள்‌ நடும்‌ பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின்‌ செயல்கள்‌ மிகவும்‌ பாராட்டுக்குரியவை. 

ஈஷா அறக்கட்டளையை செம்மையாக நடத்தி வரும்‌ அனைவருக்கும்‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்‌.

இவ்வாறு அவர் கூறினார்‌.

ஈஷாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள்‌ மற்றும்‌ தியான அன்பர்களுக்கு மகா சன்னிதானம்‌ அருளாசி வழங்கினார்‌. மேலும்‌, ஈஷாவின்‌ பிரம்மச்சாரிகள்‌ மற்றும்‌ சந்நியாசிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்‌.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...