சட்டவிரோதமாக குழாய் பதிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் - ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு!

காரமடை அடுத்த பல்லேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை காரமடை அருகே ஊராட்சி மன்ற தலைவர் சட்டவிரோதமாக குழாய் பதித்து வருவதை கண்டித்து ராஷ்ட்ரிய இந்து மகா சபா சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவகுமார் அவரது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக அவரது விவசாய தொழிலுக்காக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் குழாய் பதித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் மனு அளிக்க வந்த நபர்கள் தங்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு, குழாய்களை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கை வலியுறுத்தினர். 

இதுகுறித்து மாநிலத் தலைவர் வேலுச்சாமி கூறியதாவது, காரமடை ஒன்றியம் பல்லேபாளையம் பஞ்சாயத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், ஆலாங்கொம்பு பகுதியில் இருந்து குமரன் குன்று பகுதி வரை சட்டவிரோதமாக எவ்வித அனுமதியும் பெறாமல் இரவு நேரங்களில் விவசாயத்திற்காக குழாய் பதித்து வருகிறார். 

இவர் அங்குள்ள அவரது அதிகாரத்தை பயன்படுத்தி இவ்வாறான சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கையில் தோய்வு ஏற்பட்டால், மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...