கோர்பா - எர்ணாகுளம் விரைவு ரயிலில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவை இளைஞர் கைது!

கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் பயணித்த சேலத்தை சேர்ந்த ரத்தினசாமி என்பவரிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் பயணியிடம் 10 சவரன் நகையை திருடிய கோவையை சேர்ந்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி (61). இவர் கடந்த 11 ஆம் தேதி கோர்பாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில், சென்னையில் இருந்து பாலக்காடு நோக்கி தனது மகள் வீட்டுற்கு சென்றுள்ளார். 

அப்போது திருப்பூர் - கோவை இடையே வந்த போது அவரது பையில் வைத்திருத்த 10 சவரன் நகை மாயமானது. இதையடுத்து ரத்தினசாமி கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த கோவை குறிச்சியை சேர்ந்த ராஜேஷ்குமார் (41) என்பவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். அப்போது அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவர் நகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. 



இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...