ஏராளமான கடன் வாங்கிய மகன் - மனமுடைந்த தாய் தந்தை விஷம் குடித்து தற்கொலை!

திருப்பூர் அடுத்த நீதியம்மாள் நகரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சார்லஸ், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், 15 லட்சம் கடன் வாங்கியதை தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் அவரது தந்தை அலெக்சாண்டரிடம் பணத்தை கேட்டு தொல்லை செய்த நிலையில், மனமுடைந்த தாய் - தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூரில் மகன் ஏராளமான கடன் வாங்கிய நிலையில், கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்ததால், மனமுடைந்த தாய் தந்தை இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் நீதியம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அலெக்சாண்டர் - அமலோற்பமேரி தம்பதி. இவர்களது மகன் சார்லஸ் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் 15 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்டதால், அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியுள்ளார். அதனால் பணம் கொடுத்தவர்கள் சார்லசின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு வற்புறுத்தி வந்ததால், மனமுடைந்த அவர் தனது மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர்‌ சென்று பார்த்த போது இருவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. 

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...