பல்லடம் அருகே தனியார் பேருந்து மோதி விபத்து - 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி சேதம்!

பல்லடம் அரசு மருத்துவமனை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.



திருப்பூர்: பல்லடம் அருகே அரசு மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அடுத்த திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசு மருத்துவமனை முன்பு சாலையோரம் வாடகைக்கு செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்திகள் என வாகனங்களை வரிசைப்படுத்தி நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ராஜலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பல்லடம் நோக்கி சென்றுள்ளது.



அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அமரர் ஊர்தி மற்றும் அவசர ஆம்புலன்சுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில் 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அமரர் ஊர்தி ஆகியவை சேதமடைந்தன.

இந்த விபத்தில் பேருந்தில், பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...