வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும், ஜாக் தலைவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ஜாக் தலைவர் மீது பார் கவுன்சில் எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும். வழக்கறிஞர் சேம நல நிதியை 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக தமிழக அரசு உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோவையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.