கோவையில் நகைக்கடை அதிபரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி - தம்பதி மீது புகார்!

கோவை ராஜவீதியில் இயங்கி வரும் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நகை வியாபாரி ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன


கோவை: கோவை மாவட்டம் ராஜவீதியில் நகைக்கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் வாங்கிக் கொண்டு பணம் தராமல் மோசடி செய்ததாக தம்பதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் விநாயகபுரம் அருகேயுள்ள விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (56). இவர் கோவை ராஜவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், ரமேஷ் குமாருக்கு கோவை செட்டிவீதியை சேர்ந்த நகை வியாபாரி ரகுநாத் (43) என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது. ரகுநாத், ரமேஷ்குமாரிடம் நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரமேஷ்குமார் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கத்தை ரகுநாத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நகைகளை வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ரகுநாத் அதற்குண்டான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார்.

ரமேஷ்குமார் பலமுறை கேட்டும் அவர் நகை, பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், ஏமாற்றமடைந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரகுநாத் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டதாக ரகுநாத் மனைவி ஸ்ரீலேகா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...