தொண்டாமுத்தூர் அருகே விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு - பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டது!

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவர் தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வழக்கம் போல மண்வெட்டியை எடுக்க வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்கு சென்றுள்ளார்.



அப்போது அங்கே சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கோவை சரக வனத்துறையினர் கொட்டகையில் இருந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட மலைப்பாம்பை பரிசோதனை செய்து பின்னர் மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது கெம்பனூர் பகுதி வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கிருந்து, இந்த மலைப்பாம்பு வந்திருக்க கூடும் என தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...