டிஐஜி விஜயகுமார் மரணம் - கோவையில் பேனர் வைத்து அஞ்சலி செலுத்திய இளைஞர்கள்!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில் கோவை - தடாகம் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி விஜயகுமாருக்கு இளைஞர்கள் பேனர் வைத்து மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த 7ம் தேதி அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிஐஜி விஜயகுமார் இறப்பிற்கு தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தலைவர், காவல் அதிகாரிகள் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது இந்த தற்கொலை காவல்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில் கோவை தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் ஊரை சேர்ந்த இளைஞர்கள் டிஐஜி விஜயகுமாருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்வில் நஞ்சுண்டாபுரம் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் VKV சுந்தரராஜ், தடாகம் காவல்துறையினர் உட்பட அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.



இளைஞர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...